Posts

Showing posts from June, 2021

Schindlers list

Image
 ///"இன வெறுப்புகளுக்கு  மத்தியில் மலரும் மனிதநேயம்" Schindler's list- திரைப்படம். உலக வரலாற்றில் இன்றளவும் மிக மோசமான இனப்படுகொலை நிகழ்வாக பார்க்கப்படுவது ஹிட்லர் நிகழ்த்திய யூத இன மக்களின் மீதான படுகொலையே. இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட 6 மில்லியன் யூத இன மக்களை கொன்றொழித்தான் ஹிட்லர். ஒரு இனத்திற்கு எதிராக செயல்படும்  எல்லோருமே ஹிட்லர் போல கெட்டவர்களாக இருப்பதில்லை. யூதர்களை முழுமையாக வெறுத்து அவர்களை படுகொலை செய்த ஆரிய இனத்தைச் சேர்ந்த ஹிட்லர் பிறந்த அதே ஜெர்மனியில் பிறந்து 1200 யூதர்களை காப்பாற்றிய oscar Schindler என்ற மனிதனின் கருணைப் பற்றியும்,நாஜிப்படைகளின் நாச வேலைகள் பற்றியும் படம் பேசுகிறது. ஒரு ஐந்து வயது சிறுவன் நாஜி முகாம் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடி பதுங்கு அறைகளுக்குள் ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருப்பதால்  மலக்கிடங்கு தொட்டிக்குள் இறங்கி கழுத்து மட்டும் தெரிய நிற்கும் அந்த ஒரு காட்சி போதும் ஒரு இளம் பிஞ்சு நெஞ்சை இனவெறி எப்படி பதைக்க வைக்கிறது என்பதை உணர. oscar Schindler ஆக நடித்திருக்கும் Liam Neeson,அவரின் உதவியாளராக வரும் யூத இனத்தை...

The Shawshank Redemption

Image
 ///The Shawshang Redemption படத்தை முன்வைத்து கொரோனா பெருந்தொற்றின் பேரச்சத்தில் நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாம் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை  தடுப்பூசி வந்து தந்துள்ளது. மருத்துவர்களே நம் உடல் நோய்க் கொண்டிருக்கும் போது மருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள்,அதோடு சேர்த்து நம்பிக்கையோடும் இருங்கள் என்கிறார்கள். நம்பிக்கை தான் நம்மை நாளை என்ற ஒன்றை நோக்கி நகர்த்துகிறது. வாழ்வின் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் நாம் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும்  இழந்துவிடக்கூடாது என்பதை உணர்த்தும் ஒரு உன்னத கலைப்படைப்பு The Shawshank Redemption திரைப்படம். எப்பொழுதெல்லாம் நம் விருப்பத்திற்கு,அல்லது நம் வாழ்விற்கு எதிரானதாக  நிகழும் எதிர்மறையான நிகழ்விற்கு நம் மனம் போராடாமல் நம் வாழ்வே அவ்வளவுதான் என்று துவண்டு விடுகிறது. "இனி வாழ முடியாது என்கிற பயம் ஒருவனை சிறைக்கைதியாக வைத்து விடுகிறது.ஆனால் நம்பிக்கை தான் ஒருவனை எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுதலை செய்கிறது" என்ற கருத்தை நம் கண் முன் வைக்கும் கலைப் புதையல் இந்த திரைப்படம். உங்கள் மனம் நம்பிக...

ஹிமாலயம்

Image
 ஹிமாலயம் (சிகரங்ளினூடே ஒரு பயணம்) நூலை முன்வைத்து இமயமலை இந்தியாவின் பாதுகாப்பு அரண் என்பதோடு அதிக ஆன்மிக தலங்களைக் கொண்ட ஒரு மலையாக இருக்கிறது. நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பயணம் மேற்கொள்ள விருப்பம் கொள்ளும் ஒரு இடமாகவும் இமாலயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இமாலய பயணத்தைப் பற்றிய ஒரு நூல்தான் "ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்" எனும் இந்த நூல். மலையாளத்தில் எழுத்தாளர் ஷெளக்கத் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ. பயண அனுபவ நூல்களில் பெரும்பாலும் பயணம் செய்பவர்களின் சுய புராணங்கள், தட்டையான தகவல் குறிப்புகள் என மனக்கடுப்பை உண்டாக்கும் சமாச்சாரங்களே அதிகம் இருக்கும். ஒரு சில மொழிபெயர்ப்பு நூல்கள் திராபையான உணர்வை கொடுப்பவையாகவும் இருக்கும். ஆனால் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்த நிலம் பூத்து மலர்ந்த நாள் மற்றும் ஹிமாலயம் இரண்டுமே மூல படைப்பிற்கு நிகரான மொழிபெயர்ப்பு கொண்டவை. இந்த ஹிமாலயம் புத்தகம் வாங்குவதற்கான உந்துதலையும், விருப்பத்தையும் கே.வி.ஜெயஸ்ரீயின் நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பில்இருந்த மொழியழகும்,ஒரு ...

ஊர்சுற்றிப் புராணம்

Image
 ///ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ஊர் சுற்றிப் புராணம் நூலை முன்வைத்து ஊர்சுற்றிப் புராணம் என்ற இந்த நூல் ராகுல் சாங்கிருத்யாயனின் வெறும் பயண அனுபவங்களை பேசும் நூல் அல்ல. ஊர் சுற்றுவதற்கு ஒருவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகள் என்ன?அதில் உள்ள  தடைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல். இந்தியப் பயண உலகின் தந்தை எனப் போற்றப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் ஊர் சுற்ற புறப்பட விரும்பும் ஊர் சுற்றிகளுக்கு எழுதிய ஒரு வழிகாட்டும் கையேடு இந்த புத்தகம். "உலகத்தில் உள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்றும்,ஊர் சுற்றுவதை விட தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிவது வேறொன்றுமில்லை"என்ற கருத்தை தாழ்மையுடன் முன்வைக்கிறார் ராகுல்ஜி. உலகத்தில் ஏதாவது மிகப் பழமையான மதம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது ஊர் சுற்றி மதம் தான் என்கிறார். புத்தர்,ஏசுநாதர், மகாவீரர்,ஆதிசங்கரர், குருநானக்,சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகிய எல்லோருமே ஊர் சுற்றிகள் தான் என்ற கருத்தை முன் வைக்கிறார். கொலம்பசும்,வாஸ்கோடகாமாவும் ஊர் சுற்றிகளாக இல்லாமலிருந்திருந்தால் அமெரிக்காவையும், கடல் நீர் வ...

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

Image
 ///அ.முத்துலிங்கம் எழுதிய "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" நாவலை முன்வைத்து அ.முத்துலிங்கம்  அவர்கள் எழுதிய படைப்புகளில்"கடவுள் தொடங்கிய இடம்" நாவலை இதற்கு முன் வாசித்திருக்கிறேன். உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் நான் வாசிக்கும் அவருடைய இரண்டாவது படைப்பாகும். உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகத்தை எந்த வகைக்குள் வைக்கலாம்? நாவல் அல்லது கட்டுரைத் தொகுப்பு அல்லது  சிறுகதைத் தொகுப்பு என எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்றாலும்,இது ஒரு சுய வரலாற்று புனைவு நாவல் என்று எடுத்துக் கொள்ளலாம். அ.முத்துலிங்கம் அவர்களின் பால்ய நினைவுகளிலிருந்து,அவர் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த நினைவு சேகரங்களின் புனைவு கலந்த ஒரு படைப்பு இந்த புத்தகம். பொதுவாக புலம்பெயர் படைப்பாளர்களின் படைப்புகள் ஈழத்தில் நிகழ்ந்த போர்  அவலங்களின் கண்ணீரையும் கழிவிரக்கத்தையும் பேசுபவை. ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் அப்படி எதையும் பேசுவதில்லை. "கடவுள் தொடங்கிய இடம்"நாவல் கூட நிஷாந்த் என்ற ஒரு அகதியின் அலைதல் பயணத்தைப் பற்றி பேசக் கூடியதே. அ.முத்துலிங்கம் அ...

மானசரோவர்

Image
 ///அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் நாவலை முன்வைத்து அசோகமித்திரன் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியதாலோ என்னவோ சினிமா பற்றிய தாக்கம் அவருக்குள்ளும் அவரது சில படைப்புகளிலும் அதிகம் உள்ளது எனலாம். அவருடைய கரைந்த நிழல்கள்,தண்ணீர் மற்றும் இந்த மானசரோவர் நாவலிலும் சினிமா உலகம் தான் களமாக கையாளப்பட்டுள்ளது. தண்ணீர் நாவலை அப்படி முழுமையாக சினிமா களம் கொண்ட நாவல் என்று சொல்ல முடியாது.நாவலில் வரும் பாஸ்கர்ராவ் மற்றும் ஜமுனா சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அவ்வளவே. மானசரோவர் நாவல் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக இருக்கும் கோபாலன் என்பவருக்கும்,ஹிந்தி சினிமா உச்ச நட்சத்திரமாக இருந்த சத்யன் குமார் என்ற நடிகருக்கும் இடையே உள்ள நட்பை பற்றியது.  கோபாலன் பாத்திரம் மணிக்கொடி இதழ் எழுத்தாளர் கி.ராமச்சந்திரன் என்பவரின் புனைவு என்றும்,சத்யன்குமார் என்பது ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் புனைவு என்றும் சொல்லப்படுகிறது. கோபாலன் மற்றும் சத்யன் குமார் இருவரின் பார்வையில் தான் மாறி மாறி நாவல் சொல்லப்படுகிறது. நாவல் நேரு இறக்கும் காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.நேருவின...

மே-2021ல் வாசித்த புத்தகங்கள்

Image
 இம்மாதம் மே 2021ல் வாசித்த புத்தகங்கள்: 1.அனார்யா-சரண்குமார் லிம்பாலே 2.இடக்கை -எஸ்.ராமகிருஷ்ணன் 3.நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் -டாக்டர் அம்பேத்கர் 4.ஒற்றன் -அசோகமித்திரன் 5.பல நேரங்களில் பல மனிதர்கள்- பாரதி மணி 6.தண்ணீர் - அசோகமித்திரன் 7.உலகப் புகழ்பெற்ற மூக்கு-வைக்கம் முகமது பஷீர் 8.அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான் 9.அனல் ஹக் -வைக்கம் முகமது பஷீர் 10.வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் -கிருபாகர் - சேனானி 11.நடந்தாய் வாழி காவேரி -சிட்டி-தி.ஜானகிராமன் ❤️❤️❤️❤️

நடந்தாய் வாழி காவேரி

Image
 ///சிட்டி-தி.ஜானகிராமன் எழுதிய "நடந்தாய் வாழி காவிரி" நூலை முன்வைத்து பயணம் பற்றிய நூல்கள் எப்பொழுதுமே எனக்கு விருப்பமானவை. அப்படி  நான் விரும்பிப் படித்த பயண நூல்கள் என ஏ.கே.செட்டியார் எழுதிய "இந்திய பயணங்கள்", "குடகு", வெ.சாமிநாத சர்மா எழுதிய "எனது பர்மா வழி நடைப்பயணம்", அதியமான் கார்த்திக் எழுதிய ஆப்பிரிக்க நாடுகளின் பயணங்கள் பற்றிய "நாடோடியின் கடிதங்கள்" எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரி,ரயில் நிலையங்களின் தோழமை ஆகிய நூல்களைச் சொல்லலாம்.  "jobs fill your packet,Travel and adventures fill your Soul"என்ற ஆங்கில சொலவடை ஒன்று உண்டு. அதாவது வேலை உங்கள் பாக்கெட்டை மட்டும் தான் நிரப்பும் ஆனால் பயணங்களும் அது கொடுக்கும் சாகச உணர்வுகளும் உங்கள் ஆன்மாவை நிரப்பும் என்பதாகும். into the Wild என்ற ஆங்கிலப் படம் பயணம் செய்யும் ஒரு இளைஞனைப் பற்றிய படம். நான் பார்த்தவரை பயணம் பற்றிய படங்களில் சிறந்த படம் into the Wild என்பேன். அன்றாட செக்கு மாட்டு வாழ்வின் சலிப்பிலிருந்து நம்மை ஆசுவாசப்படுத்தி கொள்ள பயணங்களே உதவுகின்றன. என் ப...