காந்தி வழி
காந்தி எழுதிய ‘From Yervada Mandir’ என்ற நூலைத் தழுவி என்.சொக்கன் காந்தி வழி நூலை எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையானமுறையில் அறிமுகப்படுத்தும் நூல்.
மிக எளிமையான விளக்கத்துடன் காந்தியின் கொள்கைகளை இந்த நூல் விளக்குகிறது.
காந்தியின் கொள்கைகள் வெறுமனே நூல்களிலிருந்து படித்ததோ எவரிடமிருந்தோ போதனைகள் மூலம் பெற்றது அல்ல.அவரை சுயமாக சுட்டு சுட்டு வாழ்வின் சத்தியத்தை, ஒழுக்கத்தை தன்னுள் உருவாக்கிக் கொண்டவர்.
தன் வாழ்வைத்தான் அவர் இந்த சமூகம் கற்றுக் கொள்ளும் பாடமாகவும் கொள்கையாகவும் முன் வைத்தவர்.
குறிப்பாக காந்தியை அணுக விரும்பும் ஆரம்ப நிலை வாசகர்கள் வாசிக்க ஏற்ற நூல் இது.
Comments
Post a Comment