கருப்பு வெள்ளை கலந்த நிறம் எல்லா நிறங்களையும் தனக்குள் விழுங்கி நிழல் நிறத்தில் நிற்கும் ஒரு நிறம்.அது கண்களின் நிறம்.கருப்பு நிறம் எனக்கு எப்போதும் பிடித்த நிறம்
திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர் எண்பது ஆண்டுகளுக்கு முன் சத்தியாகிரக போராட்டத்தில் சிறை சென்ற ஒருவரால் அன்றைய சக சிறைவாசியாக இருந்த தலைவர்கள், சிறையின் சூழல் குறித்து எழுதப்பட்ட சிறை நினைவுகள் குறித்த ஒரு புத்தகம் இன்றைய தலைமுறை வாசகனுக்கு ஒரு வித சுதந்திர வரலாற்று தரவுகள் குறித்த வறட்டுத் தன்மையை அளிப்பதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்த நூல் முதலில் உடைக்கிறது. சிறையில் கைதியாய் வாழ்ந்தவர் அதன் நினைவுகளை சிறை என்பது சித்திரவதைகளை அளிக்கும் ஒரு இடம் என்ற வழக்கொழிந்த வார்த்தைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சக சிறைவாசிகளின் குணநலன்கள் குறித்தும், அவர்களுடனான நட்பு குறித்தும் முழுக்க ஹாஸ்யம் கலந்த ஒரு கேலி மொழியில் தன்னுடைய சிறை நினைவுகளை எழுதியுள்ளார் எஸ்.எல். கரையாளர். இந்த புத்தகம் வெறும் ஒரு சிறை நினைவுகளின் தொகுப்பு என்பதைத் தாண்டி அன்றைய காலத்தை அப்போதிருந்த அரசியல் நிலை, சிறைச் சூழல் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. ராஜாஜி,டி.எஸ்.சொக்கலிங்கம் (முன்னாள் தினமணி ஆசிரியர்,போரும் வாழ்வு நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர்) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே.சந்தானம்,பசும்பொன் முத
///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம். அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள். அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம். சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை நாம் சரிய
என்.ஸ்ரீராம் எழுதிய மாயாதீதம் நாவலை முன்வைத்து: என் பெரியப்பாவின் கடைசி மகள் பெயர் மகேஸ்வரி.அவள் என் வயதொத்தவள்.அவளுக்கு ஒரு கண் பூ விழுந்தது போல் வெண்மையாக பார்வையற்று இருக்கும். அவள் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கண் அவளுக்கு நன்றாக தெரிந்துக் கொண்டு தான் இருந்தது.என் பாட்டி சந்திரமதி தான் அவளை கோயில் குளம் என கூட்டிச் சென்று தீர்த்தமலை தீர்த்தத்தை எல்லாம் கண்ணில் விட்டு அந்த இன்னொரு கண்ணும் காணும் திறனை இழக்க வைத்தாள் என்று என் பெரியம்மா அழுது கேட்டிருக்கிறேன். மனிதர்கள் அவர்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்கு கடவுளை நம்புகிறார்கள்.விஞ்ஞானம் மருத்துவம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கும் இந்த சூழலிலும் கூட என் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உடல் சுகக் கேடு என்றால் முதலில் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதும், உடல் நலமில்லாதவர்களை உட்கார வைத்து சாமி எடுத்து அவர்களைச் சுற்றும் முறை இன்றும் உண்டு. தற்போது இது போல் நடப்பது குறைந்திருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் வீரியம் அதிகம் இருந்ததை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். நம்மை மீறி ந
Comments
Post a Comment