கருப்பு வெள்ளை கலந்த நிறம் எல்லா நிறங்களையும் தனக்குள் விழுங்கி நிழல் நிறத்தில் நிற்கும் ஒரு நிறம்.அது கண்களின் நிறம்.கருப்பு நிறம் எனக்கு எப்போதும் பிடித்த நிறம்
ஆக்காண்டி-வாசு முருகவேல் ஈழ இலக்கியம் என்றாலே சிங்களவர்கள் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இன அழிப்பு குறித்து மட்டுமே எழுதப்படும் என்பது எல்லோருக்குமான ஒரு மேலோட்டமான பார்வை. தமிழீழ விடுதலைக்காக உருவான தமிழ் இயக்கங்களுக்கு இடையேயான முரண்கள்,ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த நிலமிழந்து அலையும் அலைகழிப்புகள்,ஓலங்கள்,ஒப்பாரிகள் என நிறைய ஈழ இலக்கியங்கள் சிறுகதை வடிவிலும் நாவல் வடிவிலும் ஷோபா சக்தி,சயந்தன்,குணா கவியழகன் போன்றவர்களால் பாரிய கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. வாசு முருகவேலின் ஆக்காண்டி நாவல் இலங்கை தமிழ் இஸ்லாமியர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான முரணைப் பேசுகிறது.சோனகர்கள் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் இலங்கை ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்து தமிழர்களின் உடைமைகளை அபகரித்து கொடுமைப் படுத்தினார்கள் என்ற தொனியில் நாவல் நிறைய நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அதிகாரமும் சூழ்ச்சியும் கொண்ட சிங்கள ராணுவம் இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் இன முரணையும் பகையையும் ஊதிப் பெருக்கியது என்பதை நாவலின் மையமாக கொள்ளலாம். நாவலின் 87 வது பக்கத்தில் "இலங்கையின் முப்படை தலைவரையே ...
///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம். அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள். அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம். சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை ...
///இமையம் எழுதிய வாழ்க வாழ்க நாவலை முன்வைத்து எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும் என்கிறார் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம். எளிய மக்களின் வாழ்வியலை அம்மக்களின் மொழியிலேயே கலையாக்கும் வேலையை எப்பொழுதும் தன் எழுத்துக்களில் செய்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் இமையம் அவர்கள். இமையம் அவர்களின் படைப்புகளில் வரும் மனிதர்கள் வாசகர்களுக்கு அந்நியப்பட்டு போகாதவர்கள். அவரது படைப்புலகம் எளிய மனிதர்களைப் பற்றியது.நம்மை சுற்றியுள்ளவர்களைப் பற்றியது. நான் வாசித்த வரை கோவேறு கழுதைகள்,பெத்தவன்,எங்கதெ ஆகிய நாவல்களில் எளிய மனிதர்களை,அவர்களின் எதார்த்த வாழ்வின் சிடுக்குகளை எழுதியிருப்பார். எல்லாமே அரசியலிலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கி போகிறது (Everything must be from politics or towards politics) என்ற சொற்றொடர் போல அரசியலற்ற கலையும், அரசியலற்ற வாழ்வும் நாம் கற்பனை செய்ய முடியாத ஒன்று. அப்படி அரசியல் சார்ந்த ஒரு நெடுங்கதை அல்லது குறு நாவல் தான் வாழ்க வாழ்க. இமையம் அவர்கள் எழுத்தாளர் என்ற முகத்தை தாண்ட...
Comments
Post a Comment