கருப்பு வெள்ளை கலந்த நிறம் எல்லா நிறங்களையும் தனக்குள் விழுங்கி நிழல் நிறத்தில் நிற்கும் ஒரு நிறம்.அது கண்களின் நிறம்.கருப்பு நிறம் எனக்கு எப்போதும் பிடித்த நிறம்
இலட்சிய இந்து ஓட்டல் விபூதி பூசன் வந்தோபாத்தியாவின் மிகச்சிறந்த நாவல்களில் இலட்சிய இந்து ஓட்டல் முதன்மையானது என்பேன்.ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான நம்பிக்கையின் கதை.அவனைச் சுற்றிய நல்ல மனம் கொண்ட பெண்களின் கதை. மனதில் எந்தவித மலினமான எண்ணங்களும்,தன்னை அவமானப்படுத்தியவர்களையும்,வஞ்சித்தவர்களையும் வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கலாம் என்ற எந்த மனக் குரோதமும் இல்லாத ஹஜாரியின் பாத்திரம் மனித மாண்பின் உச்சம். உண்மையும்,உழைப்பும்,நேர்மையும் இருந்தால் ஒருவனுடைய பயணமும் லட்சியமும் தடைபடாது என்பதை ஹஜாரி பாத்திரத்தின் வழியாக முன் வைக்கிறார் விபூதி பூஷன். தன்னை மறைத்துக் கொள்ளாமல் எளிமையையும் நேர்மையும் அன்பையும் வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.தனியாக ஒரு ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஹஜாரியின் லட்சியத்திற்கு பணம் கொடுத்து உதவும் அதஸி(ஜமீன்தார் மகள்),குஸீமா, சுவாஷினி(இடையர் குல பெண்கள்) ஆகிய மூன்று பெண்களின் பாத்திரம் அவ்வளவு அசல் தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் சின்ன வாழ்க்கையும் சிறிய லட்சியத்தையும் எந்த வித அலங்கார பேச்சும் ஆபரண பூச்சும் இல்...
///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம். அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள். அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம். சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை ...
துயரெனும் தூரிகை தீட்டிய சித்திரம் - "அஞ்சலை" இலக்கியத்தில் இயல்புவாத எழுத்து என்பது ஒருவர் வாழும் மண்ணை, அவர்களின் வாழ்வியலை எவ்வித பூச்சும் இல்லாமல் நேரடியாக எடுத்து வைப்பது. இயல்பு வாத எழுத்தின் மிகப்பெரிய பலம் என்பதும், பலவீனம் என்பதும் அது கலைத்தன்மை நோக்கி பயணிக்காத மேலோட்டமான தட்டையான வாசகர்களின் மனங்களுக்கு நெருக்கமாக நிற்பதில்லை. இயல்பு வாத படைப்புகள் வாசகனின் மனதை உணர்ச்சிகளின் உயரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தும் வேலையையோ,அவன் நோக்கும் சுவாரஸ்ய பார்வைக்கு பந்தி வைக்கும் வேலையையோ ஒரு போதும் செய்வதில்லை. தமிழில் இயல்புவாத படைப்பாளிகளில் முக்கியமாக கருதப்படுபவர்கள் பூமணி,ஆ.மாதவன் மற்றும் இமையம். இந்த இயல்பு வாத படைப்பாளர்களின் வரிசையில் கண்மணி குணசேகரும் சேர்கிறார் அஞ்சலை நாவல் வழியாக. நாம் பார்த்த வாழ்க்கையை எதார்த்தமாக கூறும் கலை கூறின் வடிவம் கொண்டவைகளே இயல்புவாத படைப்புகள் .அப்படி அஞ்சலை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை, அவளின் அவஸ்தையை,அலைக்கழிப்பை, அவளின் கண்ணீரை இயல்பு நீங்காமல் பேசும் கலைக்காவியம் தான் அஞ்சலை நாவல். இமையத்தின் "கோவேறு கழுதைகள்...
Comments
Post a Comment