அறிந்ததினின்றும் விடுதலை
///ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை வாசிப்பது என்பது வெறும் வாசிப்பு என்ற செயலுக்குள் சுருக்கிவிட முடியாத அகத்தை தூய்மை செய்து கொள்ளும் ஒரு அகக்கலை என்றே சொல்வேன்.
உங்களையே நீங்கள் உற்று அவதானித்து உங்களையே நீங்கள் உள் விசாரணை செய்து கொள்ளும் ஒரு உயர் கலைவடிவங்களே அவரது எண்ணங்களும்,கருத்துக்களும்.
மானுட உளவியலின் அத்தனை சிக்கல்களையும் ஆன்மீக அறிவியலோடு அணுகக் கூடியவை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆழ்மனச் சொற்களும்,சொற்பொழிவுகளும்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகளில் முதன்மையானதாக போற்றப்படுவது அறிந்ததினின்றும் விடுதலை (Freedom from the unknown) எனும் இந்த நூல் தொகுப்பே.
உங்கள் மனதின் மேன்மைகளை, கீழ்மைகளை,விகாரங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்,உங்கள் அகத்தை அகலப்படுத்திக் கொள்ளவும் ஒருமுறையேனும்
ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசியுங்கள்///
velu malayan
8.11.2020
❤️❤️❤️❤️
Comments
Post a Comment