எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய "கற்றாழைக்கிணறு" சிறுகதையை முன்வைத்து

தற்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு Promising எழுத்தாளர் என சுரேஷ் பிரதீப்பைச் சொல்லலாம்.

எழுத வந்த குறைந்த காலங்களில் நிறைய எழுதியவர்.எழுதிக் கொண்டிருப்பவர்.

சிறுகதைகளில் எல்லாவிதமான வடிவ முயற்சிகளையும் மேற்கொண்டவர் புதுமைப்பித்தன்.

அதிகமாக சமூகத்தின் புற நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதிய புதுமைப்பித்தன் பரிசோதனை முயற்சியாக காஞ்சனை எனும் பேய்க் கதையையும் எழுதியிருப்பார்.

அந்த வகையான ஒரு முயற்சிதான் சுரேஷ் பிரதீப்பின் இந்த கற்றாழைக்கிணறு சிறுகதையும்.

கோயில்கள்,தெய்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நரசிம்மன் என்பவரால் அனுப்பப்பட்டு பாண்டவனுருக்கும்,பாயா நிலத்துக்கும்ம் இடைப்பட்ட குறத்திமேட்டுப்பகுதியில் மூங்கில் வீரன்,செண்பககுறத்தி கதையை ஆராய்வதற்கு வரும் சுரேஷ் என்ற முனைவர் பட்ட மாணவனின் பார்வையில் கதை நகர்கிறது.

தெய்வங்களைப் பற்றிய,மனிதர்களைப் பற்றிய தொன்ம,அமானுஷ்ய கதைகளை கி. ராஜநாராயணன்,சோ.தர்மன் படைப்புகளை படித்ததிலிருந்து அந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பு உண்டாகியது.

 சௌந்தரராஜன் சுரேஷிடம் செண்பகக்குறத்தி இறந்ததை மட்டும் சொல்லும் தொடர்ச்சியற்ற கதைக்கு அவள் ஏன் இறந்தால்,எப்படி இறந்தால் என்பதை கேசவன் சொல்லும் கதைதான்
தொடர்ச்சியற்ற கதைக்கு கண்ணியாக இருக்கிறது.

பாண்டவனூர் மூங்கில் வீரன் கிணற்றில் நிறைமாத கர்ப்பிணியான செம்பக குறத்தி விழுந்து இறந்து விடுவதால் அந்த கிணறு  முழுவதும் முதலில் கள்ளி முளைக்கிறது.பின் குறத்திக்கு பூஜை செய்து வணங்குவதால் கிணற்றில் கள்ளி மறைந்து கற்றாழை முளைக்கிறது.
இங்கு கள்ளி என்பது தீமையின் குறீயீடு. கற்றாழை என்பது தெய்வத்தின் குறியீடு.

பாயாநிலத்தில் மயில்கள் குறைவதால் நாகங்கள் வந்து ஊரையே அழிப்பதாக சொல்வதில் மயில் குறத்தியின் வடிவமாகவும்,நாகம் தீமையின் வடிவமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது.

மூங்கில் வீரன் சாமியாடி மாணிக்கத்தை கொல்லும் அவனது மனைவி பார்வதி, மாணிக்கத்தால் கருவுறும் செம்பக குறத்தியை பாண்டவனூரை விட்டே துரத்துவதால் கிணற்றில் விழுவதற்கு முன் உன் ரத்தத்தில் உருவாகும் வம்சத்தை அழிக்கும் வரை இந்த கிணற்றில் கள்ளியாக இருப்பேன் என சபித்துவிட்டு கிணற்றில் விழுந்து இறந்து போகிறாள் குறத்தி.

நரசிம்மனுக்கு கற்றாழைக்கிணற்றை புகைப்படம் எடுத்து சுரேஷ் அனுப்பும் போது கற்றாழைகளுக்கு மத்தியில் ஒரு கள்ளிப்புதர் இருப்பதை உற்றுப் பார்த்தால் தெரியும் என கடிதம் அனுப்புகிறான்.

இரவில் சுரேஷ் கேசவனிடம் பேசிவிட்டு பாயாநிலத்திலிருந்து பாண்டவனூர் நோக்கி செல்லும் போது உடல் நிலை சரியில்லாமல் இருந்த நரசிம்மனின் மகன் இறந்து போய்விட்ட செய்தியை அறிந்து செல்போன் டார்ச்சை கிணற்றுக்குள் சுரேஷ் அடித்துப் பார்க்கும் போது கற்றாழைக்கு மத்தியில் இருந்த கள்ளிப்புதர் காணாமல் போய் விடுகிறது.

நரசிம்மன் மகன் இறப்பதற்கு காரணம் நரசிம்மனின் கீழ்த் தஞ்சையின் தெய்வங்கள் என்ற நூலில் மூங்கில் வீரனுக்கு சிலை இல்லை அப்படியொரு தெய்வம் இல்லை என்று கூறுவதால் கூட குறத்தி நரசிம்மன் மகனை கு குறத்தி கொன்றிருக்கலாம்.இதுநம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்குமான சண்டையை குறிக்கிறது.

காலையில் சௌந்தரராஜனுடன் பாயாநிலத்தைச்சுற்றி பார்க்கும் போது பாயாநிலத்தில் எந்த வீடும் இல்லை என செளந்திரராஜன் சொன்னது சுரேஷ்க்கு நியாபகம் வரும் போது தான் இது ஒரு அமானுஷ்ய பேய் கதை என நம்மால் உணர முடிகிறது.

வாழ்த்துக்கள் சுரேஷ்

❤❤❤❤

Velu malayan
28.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்