இரவு(Night)
///Elie Wiesel எழுதிய இரவு(Night) நாவலை முன்வைத்து இரவு என்ற பெயரில் ஜெயமோகன் ஒரு நாவல் எழுதி உள்ளார்.ஆனால் இந்த இரவு(Night) நாவல் Elie Wiesel எழுதியது. 1944 ஆம் ஆண்டில் ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிவிலிருந்து(Holocaust) உயிர் தப்பித்த Elie Wiesel -ன் வதை முகாம் சித்ரவதைகளின் தன்னனுபவ கதை வடிவமே இரவு நாவல். தன் பால்ய வயதில் ஆஸ்விட்ச்,புச்சன் வால்ட் மற்றும் புனா ஆகிய வதை முகாம்களில் தன் தாய்,தங்கை மற்றும் தந்தையை இழந்து எலீ வீஸல் மட்டும் உயிர் பிழைக்கிறார். எலீ வீஸல் உயிர் பிழைத்த பின் பத்தாண்டுகள் கழித்து அவரால் எழுதப்பட்டது இந்த நாவல். வரலாறு தன் வயிற்றில் வாங்கி வரவு வைத்திருக்கும் உலகின் மிகப் பெரிய இன அழிப்பு நிகழ்வுகளாக யூத இன மக்கள் அழிக்கப்பட்டதையும், இலங்கை ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டதையும் கூறலாம். ஒரு அரசு அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு தனி மனித அதிகாரம் எப்போதெல்லாம் இன்னொரு இனத்தின் மீது அல்லது இன்னொரு மதத்தின் மீது வெறுப்பு கொள்கிறதோ அப்போதெல்லாம் இனப்படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆரிய வெறி ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிப்பு,சிங்கள வெறி ராஜபக்ஷே நிகழ்...